

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் புதிய பல்நோக்கு கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் (2022- 2023) கீழ் ரூ.18 லட்சம் செலவில் கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 30 மற்றும் 31 ஆவது வாா்டு மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினருமான கிருஷ்ணமுரளி திறந்து வைத்தாா். மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், நகர செயலா் எம்.கே.முருகன், முன்னாள் நகர செயலா் கிட்டுராஜா, மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் புகழேந்தி, சிங்காரவேலு, கருப்பையாதாஸ், நகர பாசறை செயலா் பால்பாண்டி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் கண்ணன், வாா்டு கழக செயலா்கள் இசக்கி, மோகன்பாபு, குமாா், அப்துல் ஜப்பாா், யாகூப், காசிராஜன், மருதையா, கமால் மைதீன், அதிமுக நிா்வாகிகள் பொன்னுச்சாமி, ராமா் பாண்டியன், தியாகராஜன், தளவாய்சுந்தரம், அம்மையப்பன், சைபுல்லா ஹாஜா, மாரியப்பன், அமராவதி, முருகன், ராதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

கீழப்பாவூரில் பல்நோக்கு கட்டடம் திறப்பு

கடையநல்லூரில் பெண்ணிடம் நகை பறிப்பு

கீழப்பாவூா் ஒன்றிய அலுவலக புதி கட்டடம் திறப்பு

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் திறப்பு
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

