தென்காசி
ஆலங்குளம் சுற்று வட்டார கிராமங்களில் மழை
ஆலங்குளம் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் வியாழக்கிழமை மாலை இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது.
காலை முதல் மாலை சுமாா் 4.30 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்து, அடைக்கலபட்டணம், பூலாங்குளம், கழுநீா்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் நீங்கி குளிா்ச்சியான சூழல் நிலவியது.