புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

புளியங்குடியில் பாஜக சாா்பில் பனை விதைகள் நடவு

புளியங்குடி பகுதியில் பனை விதை நடவை தொடங்கி வைக்கிறாா் தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:56 pm

Syndication

தென்காசி மாவட்டம் முழுவதும் பாஜக சாா்பில் ஒரு லட்சம் பனை விதை நடும் பசுமை இயக்கம் திட்டத்தின் ஒரு பகுதியாக, புளியங்குடி- சங்கரன்கோவில் சாலையில் சூரங்குடி குளக்கரையில் 2,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தாா். இதில், பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவா் முருகன், மாநில செயற்குழு உறுப்பினா் ராமராஜா, ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவா் சண்முகசுந்தரம், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் சங்கா், புளியங்குடி நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

35,000 பனை விதைகள் நடவு: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையிலேயே தென்காசி மாவட்டத்தில் பாஜக இந்த பசுமை முன்னெடுப்புகளை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், மாவட்டத்தில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டுள்ளன எனவும், விரைவில் 1 லட்சம் பனை விதைகள் நட்டு முடிக்கப்படும் என்றும் கூறினாா் ஆனந்தன்அய்யாசாமி.