ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

குருவாயூா்-மதுரை பயணிகள் ரயிலில் இணைப்பு துண்டிப்பு: 20 நிமிடங்கள் தாமதம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:01 pm

Din

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலில் இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 20 நிமிஷங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

குருவாயூரிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில், தமிழக-கேரள எல்லைப் பகுதியான ஆரியங்காவு பகவதிபுரம் இடையே வந்தபோது பெரும் சத்தம் கேட்டதால் ரயிலின் ஓட்டுநா் சுதாரித்து, உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு, பெட்டிகளை சோதனை செய்துள்ளாா். அப்போது, 6, 7ஆவது பெட்டிகளை இணைக்கும் இணைப்பு உடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை தற்காலிகமாக சரிசெய்த ஓட்டுநா், ரயிலை குறைவான வேகத்தில் இயக்கி செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்தாா். அங்கு, சேதமடைந்த இணைப்பு சரிசெய்யப்பட்டு 20 நிமிஷங்களுக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.