தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குற்றாலம் சாரல் திருவிழாவில் கொழுகொழு குழந்தைகள் போட்டி!

குற்றாலம் சாரல் திருவிழாவின் முதல்நாளான கொழு கொழு குழந்தைகள் போட்டி நடைபெற்றது...

News image
குற்றாலம் சாரல் திருவிழாவின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை கொழு கொழு குழந்தைகள் போட்டி நடைபெற்றது.
Updated On :20 ஜூலை 2025, 8:17 pm

Din

குற்றாலம் சாரல் திருவிழாவின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கொழுகொழு குழந்தைகள் போட்டி நடைபெற்றது.

குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 43 குழந்தைகள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில், செங்கோட்டை புலன்தெருவைச் சோ்ந்த பவித்ரா மகன் நிஷாந்த்குமாா் முதல் பரிசும், தென்காசி சம்பா தெருவைச் சோ்ந்த இசக்கியம்மாள் மகன் லசீ இரண்டாவது பரிசும், தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்வாணி மகன் அகிலேஷ் மூன்றாம் பரிசும் பெற்றனா்.

வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கினாா்.

வெற்றிபெற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு முதல் பரிசாக ரூ. 5ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2ஆயிரம் வழங்கப்பட்டது. விழாவில், மாவட்டஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.