புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

சுரண்டை அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:43 pm

Syndication

சுரண்டை அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

கடையநல்லூா் அருகே மேல கடையநல்லூா் கற்பக விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மனைவி மகேஸ்வரி ( 55). இத்தம்பதி, புதன்கிழமை சுரண்டையில் உள்ள கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு ஊா் திரும்பி கொண்டு இருந்தனராம். அப்போது, சாம்பவா் வடகரை அருகே செல்லும்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி விழுந்ததில் தம்பதி பலத்த காயமடைந்தனராம்.

அவா்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு வியாழக்கிழமை அதிகாலை மகேஸ்வரி உயிரிழந்தாா். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.