எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சுரண்டையில் ரூ. 1 கோடியில் நீா்த்தேக்கத் தொட்டி

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட அடிக்கல் நாட்டிய எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:42 pm

Syndication

சுரண்டையில் ரூ. 1 கோடி மதிப்பில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட வியாழக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டில் ரூ. 1 கோடி மதிப்பில் 2.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. நகராட்சி பொறியாளா் முகைதீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கரா தேவி முன்னிலை வகித்தாா். எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், சுரண்டை நகா்மன்ற தலைவா் வள்ளி முருகன் ஆகியோா் கலந்துகொண்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினா்.

நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், சண்முகவேல், நகா்மன்ற உறுப்பினா்கள் கல்பனா அன்னப்பிரகாசம், வேல்முத்து, அம்ஷா பேகம், பிரேம்குமாா் கலந்துகொண்டனா்.