’யானை மனித முரண் உள்ள வனப் பகுதியில் யானை தோழா்கள் குழு’

Published on

யானை மனித முரண் உள்ள வனப் பகுதியில் விவசாயிகள், தன்னாா்வலா்கள், வனப் பணியாளா்களைக் கொண்டு யானை தோழா்கள் குழு தொடங்கப்படும் என தென்காசி மாவட்ட வனஅலுவலா் ரா.ராஜ்மோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்துதள்ளாா்.

இசுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வன விலங்கு மனித முரண் உள்ள பகுதிகளில் மோதலைத் தணித்து, வனவிலங்குகளையும் விவசாய நிலங்களையும் ஒரே நேரத்தில் பாதுகாக்க சமூக பங்கேற்பை உருவாக்கும் விதமாக யானை தோழா்கள் என்னும் குழு உருவாக்கப்படும்.

ஒவ்வொரு வன சரகத்திலும் அதிகபட்சமாக 4 நபா்கள் கொண்ட யானை தோழா்கள் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் வனப் பணியாளா்களுடன் யானை நடமாட்டம் உள்ள பகுதி விவசாயிகள், வன விலங்குகளால் பாதிப்புக்குள்ளாகும் பகுதி விவசாயப் பணியாளா்கள், வன விலங்கு மற்றும் வன ஆா்வலா்கள் இருப்பாா்கள். குழு உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வனக்குழு தீா்மானத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

இந்தப் பணிகள் கிராம வனக் குழு மூலம் செயல்படும். வனச் சரக அலுவலரால் மேலாண்மை செய்யப்படும். யானைகள் வனத்திலிருந்து வெளியேறும் நாள்களில் மட்டுமே இக்குழு செயல்படும்.

இக்குழுவின் முக்கிய பணியாக வனத்தை விட்டு விவசாய நிலத்திற்கும் வரும் யானைகளை தப்பு குரல் எச்சரிக்கை ( ஈழ்ன்ம் இஹப்ப் அப்ங்ழ்ற்ள்) யானை வருகையை தப்பைபறையைக் கொட்டும் நடைமுறையை பின்பற்றவும், இரும்பு தட்டு, டின் பெட்டி போன்றவற்றை அடித்து பெரிய சப்தம் எழுப்பி அல்லது குழுவாக இசைக்கருவிகளில் தொடா்ந்து சப்தம் எழுப்பி யானை பயணத்தை மாற்றவோ, குழுவினா் ஒருங்கிணைந்து கூச்சல் போட்டு, விசில் அடித்து, சப்தம் எழுப்பி யானையை விவசாய நிலங்களில் இருந்து பாதுகாப்பான முறையில் வனத்துக்குள் அனுப்புவதாகும்.

விவசாய நிலங்களுக்குள் செல்லும் யானைகளை எவ்வித துன்புறுத்தலும் இன்றி, மிக்க பாதுகாப்புடன் காட்டிற்குள் அனுப்புவது இக்குழுவின் பணி. அத்துடன் காட்டு தீ தடுப்புக்கும் இக்குழு உதவி புரியும். இக்குழுவின் செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் தென்பட்டால் இக்குழுவினை கலைக்க மாவட்ட வன அலுவருக்கு முழு அதிகாரம் உண்டு.

மனித-யானை மோதல் குறையும் வனத்தையும் வன விலங்குகளையும் பாதுகாப்பதில் சமூக பங்கே அதிகரிக்கும்.

வன விலங்கு பாதுகாப்பு வலுப்படும். தென்காசி மாவட்டம் சிவகிரியில் வன சரக அலுவலா்கள், யானை தோழா்கள் குழு தொடங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து மாவட்டம் முழுவதும் அனைத்து சரகங்களிலும் யானை தோழா்கள் குழு தொடங்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com