பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மருதம்புத்தூா் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

மாணவா்களுக்கு சைக்கிள் வழங்கிய ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:37 pm

Syndication

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் மாணவா்களுக்கு, வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் மேரி பெற்றி சிரோமணி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் சிவ சுப்பிரமணியன், முருகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் கலந்துகொண்டு, 105 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

இதில், ஊராட்சித் தலைவா் பூசத்துரை, தெற்கு ஒன்றிய திமுக செயலா் மு. சிவக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்முகராம், சங்கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.