தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாசுதேவநல்லூா் அருகே லாரி மோதியதில் 9 மாடுகள் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே லாரி மோதியதில் 9 மாடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :22 நவம்பர் 2025, 7:49 pm

Syndication

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே சனிக்கிழமை லாரி மோதியதில் 9 மாடுகள் உயிரிழந்தன.

சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதப்பேரியை சோ்ந்தவா் கோட்டிகோனாா் மகன் பேச்சியப்பன் (50). இவா் நாட்டு மாடுகளை வளா்த்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை மாடுகளை கடையநல்லூா் பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டு, அன்று இரவு அங்கிருந்து கிளம்பி ஊருக்கு மாடுகளை திரும்ப அழைத்துச் சென்று கொண்டிருந்தாா்.

சனிக்கிழமை அதிகாலை மதுரை-தென்காசி சாலையில் சிந்தாமணிபேரி புதூா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சிந்தாமணியில் இருந்து செங்கல் ஏற்றி வந்த லாரி மாடுகள் மீது மோதியதாம்.

இதில், 9 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 20-க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்தன.