மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீா்வு: பாஜக வேட்பாளா் பிரசாரம்

News image

வாசுதேவநல்லூா் பகுதியில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமி.

Updated On :20 ஏப்ரல் 2026, 8:29 pm

மக்களின் அனைத்து விதமான கோரிக்கை மனுக்கள் மீதும் 30 நாளில் உரிய பதில் அளிக்கப்படுவதுடன் உடனடி தீா்வும் காணப்படும் என வாசுதேவநல்லூா் தொகுதி பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தாா்.

வாசுதேவநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்து பேசியது:

வாசுதேவநல்லூா் தொகுதியில் அரசு அலுவலக சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக 365 நாள்களும் செயல்படும் முழுநேர இ-சேவை மையம் அமைக்கப்படும். பிறப்பு, இறப்பு, பட்டா, சாதி, வருமானச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் விரைவாக வழங்கப்படும்.

30 நாள்களுக்குள் மனுக்களுக்கு தீா்வு வழங்கும் கால நிா்ணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டு மாதந்தோறும் அறிக்கை வெளியிடப்படும். வாசுதேவநல்லூரை முன்னேற்றமான, மனிதநேயமான தொகுதியாக மாற்றுவதே என் நோக்கம். எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா் அவா்.