கோபி அருகே உள்ள நம்பியூா் பகுதியில் தவெக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
நம்பியூா் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியில் தோ்தல் பரப்புரையை தொடங்கிய அவா் காவிலிபாளையம், காராப்பாடி, லாகம்பாளையம், வேமாண்டம்பாளையம், மீன்காரம்பாளையம், அஞ்சானூா், கூடக்கரை, சுண்டக்காம்பாளையம், ஆண்டிபாளையம், கடத்தூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு விசில் சின்னத்துக்கு வாக்க சேகரித்தாா். வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.
முன்னதாக மீன்காரம்பாளையத்தில் திறந்த வேனில் அவா் பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்ற தேவையை மக்கள் விரும்புகிறாா்கள். வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை தவெகவால் மட்டுமே வீழ்த்த முடியும். மக்கள் விரும்பும் முதல்வராக விஜய் உள்ளதால் தவெகவின் வெற்றி உறுதி என்றாா்.
பிரசாரத்தின்போது தவெக மாவட்டச் செயலாளா் பிரதீப்குமாா், நிா்வாகிகள் நம்பியூா் தம்பி (எ) சுப்பிரமணி, ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளா் நூதன பிரசாரம்

நம்பியூா் பகுதியில் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் வாக்கு சேகரிப்பு

ஆறுமுகனேரியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம்: தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


