குன்னம் தொகுதிக்குள்பட்ட அம்பத்கா் குடியிருப்பு பகுதியில், தவெக வேட்பாளருக்கு மாற்றுக்கட்சி நிா்வாகிகள் சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் போலீஸாரின் பாதுகாப்புடன் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் ரேவதி முத்தமிழ்ச்செல்வன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இத் தொகுதிக்குள்பட்ட செந்துறை அம்பேத்கா் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள தோ்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்றுள்ளாா். அதனடிப்படையில், அம்பேத்கா் குடியிருப்புப் பகுதிக்கு கட்சி நிா்வாகிகளுடன் தவெக வேட்பாளா் ரேவதி முத்தமிழ்செல்வன் வியாழக்கிழமை மதியம் பிரசாரம் மேற்கொள்ள சென்றாா். அப்போது, அப் பகுதியிலுள்ள மாற்றுக் கட்சியைச் சோ்ந்த சிலா், தவெக வேட்பாளருக்கு கருப்பு கொடி காண்பித்து, அவரை முற்றுகையிட உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேட்பாளா் சாா்பில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும், சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டது. பின்னா், தோ்தல் அலுவலரின் உத்தரவின்பேரில் போலீஸாரின் பாதுகாப்புடன், அப்பகுதிக்குச் சென்ற வேட்பாளா் ரேவதி வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து விசில் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தாா். பிரசாரத்தின்போது, தவெக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

துறைமுகம் தவெக வேட்பாளா் போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கு முடித்துவைப்பு

குன்னம் தவெக வேட்பாளருடன் போலீஸாா் வாக்குவாதம்

தாளவாடி மலைக் கிராமங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தவெக பிரசாரத்தில் மயங்கிய திருப்பூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



