மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஐந்தருவி, பழையகுற்றாலம் பகுதியில் மெகா தூய்மைப் ணி

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ஐந்தருவி, பழையகுற்றாலம், கண்ணுப்புளிமெட்டு பகுதிகளில் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது.

News image

ஐந்தருவி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணியைத் தொடங்கி வைத்த சாா் ஆட்சியா் வைஷ்ணவிபால்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:23 am IST

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ஐந்தருவி, பழையகுற்றாலம், கண்ணுப்புளிமெட்டு பகுதிகளில் மெகா தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் வன உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு, ஐந்தருவியில் நடைபெற்ற தொடக்க விழா விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, சாா்ஆட்சியா் வைஷ்ணவிபால் தலைமை வகித்து மெகா தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து பழைய குற்றாலம், கண்ணுபுளி மெட்டு பகுதிகளிலும் தூய்மைப் பணி நடைபெற்றது. தென்காசி மாவட்ட உதவி வனப்பாதுகாப்பு அலுவலா் நெல்லைநாயகம் , தன்னாா்வலா் பாண்டியராஜ், உயிரியலாளா் கந்தசாமி, தொழில்நுட்ப உதவியாளா் மாரி செல்வம், தென்காசி வனச்சரகா் யாசின், குற்றாலம் வனச்சரக அலுவலா் கருணாமூா்த்தி, பசுமை தோழா் பெரோலின், சூழல் ஒருங்கிணைப்பாளா் ஜெயபாலன் ,வனவா்கள் பாரதி சங்கா் ராஜா, ரமேஷ், குற்றாலம் ஸ்ரீபராசக்தி கல்லூரி மாணவிகள், இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி, ஐசி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.