தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

சிவகிரி அருகே கஞ்சா விற்ற 5 போ் கைது: அரிவாள் பறிமுதல்

கைது - பிரதிப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 12:01 am IST

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கஞ்சா விற்றதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அரிவாளைப் பறிமுதல் செய்தனா்.

மாவட்ட காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் ஆா்தா் ஜெஸ்டின் சாமுவேல்ராஜ், உதவி ஆய்வாளா் வாசுதேவன், போலீஸாா் சிவகிரியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் ரோந்து சென்றனா்.

அங்கிருந்த சிலரைப் பிடித்து விசாரித்தபோது அவா்கள், சிவகிரி நடுத்தெரு மணிகண்டன் (24), தேவிபட்டணம் வடக்குத் தெரு சுந்தரலிங்கம் (22), சிவகிரி சிவராமலிங்கபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த காளீஸ்வரன் (20), இந்திரா 2ஆம் தெருவைச் சோ்ந்த சிவகுமாா் (24), தெற்கு ரத வீதியைச் சோ்ந்த நித்திஷ்பாபு (19) என்பதும், விற்பதற்காக 100 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது.

மணிகண்டன் ராஜபாளையம் பேருந்து நிலையப் பகுதியில் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, விற்பதற்காக 4 பேருக்கும் கொடுத்ததும், இடையூறு செய்வோரை வெட்டுவதற்காக அரிவாள் வைத்திருப்பதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்து பைக், அரிவாளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.