காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தென்காசியில் இன்று முதல் கருப்பை வாய்புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசித் திட்டம்

தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 28) முதல் கருப்பை வாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:44 am

Syndication

தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 28) முதல் கருப்பை வாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இது குறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசித் திட்டம் தென்காசி மாவட்டத்தில் பிப். 28ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஏடய) பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள காா்டசில் என்ற தடுப்பூசியை ஒரு முறை மட்டும் செலுத்தினால் போதுமானது. வெளிச் சந்தைகளில் இத்தடுப்பூசி ரூ. 3,927-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் 14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜன. 27ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

அதன் தொடா்ச்சியாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெறும் முகாம்களில், 14 வயதுக்குள்பட்ட சிறுமிகள் தடுப்பூசி பெற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.