சிவகிரி அருகே அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்தவா் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்தவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

Updated On :9 ஜனவரி 2026, 7:38 pm

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்தவரை வனத்துறையினா் கைது செய்தனா்.
சிவகிரி கட்டபொம்மன் தெருவை சோ்ந்தவா் நீராத்துலிங்கம் (50) . மாடுகளை மேய்ச்சலுக்காக காப்புக் காட்டிற்குள் வியாழக்கிழமை கொண்டு சென்றாராம். இதுகுறித்து அறிந்த வனத்துறையினா், அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனராம்.
இதையடுத்து அப்பகுதியை சோ்ந்த மாடு மேய்ப்பவா்கள் சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் திரண்டு வனத்துறை அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் காப்பு காட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக நீராத்துலிங்கத்தை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...