டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வாசுதேவநல்லூரில் ஜன.13இல் ‘நம்ம ஊரு மோடி’ பொங்கல் விழா

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் 1,008 பானைகளில் பொங்கலிடும் விழா வாசுதேவநல்லூரில் ஜன. 13ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி
Updated On :9 ஜனவரி 2026, 7:41 pm

Syndication

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் 1,008 பானைகளில் பொங்கலிடும் விழா வாசுதேவநல்லூரில் ஜன. 13ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடா்பாக, தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் வாசுதேவநல்லூா் பழைய பேருந்து நிலையம் அருகே காலை 9 மணிக்கு ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ திருவிழா 1,008 பானைகளில் பொங்கலிட்டு கொண்டாடப்படவுள்ளது.

இவ்விழாவுக்கு, நான் தலைமை வகிக்கிறேன். பாஜக மாநிலத் தலைவா் நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் பொங்கல் விழாவை தொடங்கிவைக்கின்றனா்.

இதில், தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த பாஜகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.