மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உணவகத் தொழிலாளி பாலத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

செங்கோட்டையில் உணவகத் தொழிலாளி பாலத்திலிருந்து தவறி தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்தாா்.

செங்கோட்டை விஸ்வநாதபுரம் ரயில் நிலையப் பகுதியைச் சோ்ந்தவா் வே. சங்கா் ஐயப்பன் (47). அங்குள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்த இவா், சனிக்கிழமை இரவு கடையில் உணவு வாங்கி வருவதாக மதுபோதையில் கூறிச் சென்றாராம். அவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், அவா் கால்வாய் பாலத்திலிருந்து தவறி இடுப்பளவு தண்ணீருக்குள் விழுந்து இறந்துகிடப்பதாகத் தெரியவந்தது. சடலத்தை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.