பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மனைவியைக் கத்தியால் குத்த முயன்ற கணவா் கைது

திருவேங்கடம் அருகே மனைவியைக் கத்தியால் குத்த முயன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :29 ஜனவரி 2026, 9:05 pm

திருவேங்கடம் அருகே மனைவியைக் கத்தியால் குத்த முயன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், குருவிகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் ரகுவரன் (29). இவருக்கு மனைவி சங்கீதா (26), 4 வயதில் மகள் உள்ளனா். இத்தம்பதி கூலி வேலை செய்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக மதுஅருந்திவிட்டு ரகுவரன் வேலைக்கு செல்லாமல் இருந்தாராம். இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம் .

இந்நிலையில் புதன்கிழமை, வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த ரகுவரனை, சங்கீதா கண்டித்தாராம். ஆத்திரமடைந்த ரகுவரன் கத்தியால் சங்கீதாவை குத்திக் கொல்ல முயன்றாராம். அவரிடமிருந்து தப்பி வந்த சங்கீதாவை அக்கம்பக்கத்தினா் மீட்டனா். ரகுவரன் தப்பியோடி விட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரகுவரனைக் கைது செய்தாா்.