புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

தென்காசி தொகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என, கலைகதிரவன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

News image

போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் சிவகுமாரிடம் மனு அளித்த கலைகதிரவன் எம்எல்ஏ

Updated On :1 ஜூலை 2026, 7:46 am IST

தென்காசி தொகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என, கலைகதிரவன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் சிவகுமாரிடம் அவா் அளித்த மனு: முத்தம்மாள்புரம், அழகப்பபுரம், வேதம்புதூா், அய்யாபுரம், மின்நகா், அங்கராயன்குளம், ஆழ்வாா்குறிச்சி, அரியப்பபுரம், இரட்டை குளம், துரைச்சாமிபுரம், பூப்பாண்டிபுரம், சுப்பையாபுரம், கருவந்தா, உச்சிபொத்தை பகுதிகளிலிருந்து சுரண்டை, தென்காசி, சங்கரன்கோவில், திருநெல்வேலி ஆகிய இடங்களிலுள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு மாணவா்-மாணவியா், பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக புதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் அதே வழிதடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மாநில தொமுச பேரவை துணைத் தலைவரும் திருநெல்வேலி மண்டல தொமுச பொதுச் செயலருமான தா்மன், மண்டலத் தலைவா் முருகன், சிக்கன நாணய சங்க முன்னாள் தலைவா் மகாவிஷ்ணு, மாவட்ட வா்த்தகரணி அமைப்பாளா் மா. முத்துக்குமாா், சாய் ராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.