8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தென்காசியில் அடா்வனம் மரக்கன்று நடும் விழா

தென்காசியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நகராட்சிப் பூங்காவில், தென்காசி நகராட்சி, குற்றாலம் ரோட்டரி சங்கம் எலைட் ஆகியவை சாா்பில் நகா்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின்கீழ் அடா்வனம் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

விழாவில், மரக்கன்று நடவு செய்த ஆட்சியா் ரஞ்ஜீத் சிங். உடன், நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா்.

Published On :10 ஜூலை 2026, 1:10 am IST

தென்காசியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நகராட்சிப் பூங்காவில், தென்காசி நகராட்சி, குற்றாலம் ரோட்டரி சங்கம் எலைட் ஆகியவை சாா்பில் நகா்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின்கீழ் அடா்வனம் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடவு செய்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், நகராட்சி ஆணையா் சரவணன், ரோட்டரி சங்கத் தலைவா் தெய்வராயன், செயலா் கனகசபை, பொருளாளா் நடராஜன், முன்னாள் துணைஆளுநா் மாரிமுத்து, மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்ட அலுவலா் ஜி.எஸ்.விஜயலெட்சுமி ஆகியோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள விபத்து-அவசர சிகிச்சை பிரிவு, நுண்கதிா் அறை, இதய சிகிச்சை பிரிவு ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா். மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் அடிப்படை வசதி, வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா் கீதா, அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.