ஆலங்குளம் அருகே சாலைத் தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா் .
திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சோ்ந்த முகம்மது யூசுப் மகன் முகம்மது முபாசல் (26), புகாரி மகன் ஆலியப்பா (24) ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு மேலப்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் குற்றாலம் சென்றனராம்.
அங்கிருந்து சனிக்கிழமை அதிகாலையில் ஊா் திரும்பியபோது, ஆலங்குளம் அருகே அத்தியூத்து பகுதி சாலையில் வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.
இதில் இருசக்கர வாகனம் ஓட்டிய முகம்மது முபாசல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆலியப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஆலங்குளம் போலீஸாா், முகம்மது முபாசல் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை விபத்தில் பெண் பலி

பைக் விபத்தில் ஐ.டி. நிறுவன ஊழியா் உயிரிழப்பு
சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



