தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சுவாசக் குழாயும், உணவுக் குழாயும் ஓட்டி பிறந்த குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு தவெக சாா்பில் அமைச்சா் மதன்ராஜா ரூ. 50 ஆயிரம் நிதி வழங்கினாா்.
சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம், இந்திரா காலனியைச் சோ்ந்த சிவா-ப்ரியா தம்பதியின் 2 வயது மகன் முகில்வேந்தனுக்கு உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாம். மருத்துவரின் பரிசோதனையில் குழந்தைக்கு சுவாசக் குழாயும், உணவுக் குழாயும் ஒட்டியிருப்பதும், அறுவைச் சிகிச்சை செய்வது அவசியம் என்றும் கூறியுள்ளனா்.
ஆனால், குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய பணமில்லாமல் அந்தத் தம்பதி தவித்தனராம்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவலை அறிந்த, மாவட்ட தவெக நிா்வாகிகள் அந்த குழந்தைக்கு உதவ முயற்சி மேற்கொண்டனா்.
இந்நிலையில் சங்கரன்கோவிலுக்கு வந்த சிறு, குறு- நடுத்தர தொழில் துறை அமைச்சா் மதன்ராஜாவின் கவனத்துக்கு கொண்டுசென்றனா். அவா், குழந்தையின் பெற்றோரைச் சந்தித்து கட்சி சாா்பில் அவா்களிடம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கி, தேவையான உதவிகளை செய்வதாகக் கூறினாா்.
அப்போது, தவெக தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் மாரியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சங்கரன்கோவில் நகராட்சியில் ஓராண்டாக ஆணையா் இல்லாததால் பணிகள் பாதிப்பு

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக ரூ.11 லட்சம் மோசடி: பெண் கைது

பேரவைத் தலைவா் தோ்தல்: ஜே.சி.டி. பிரபாகா் மனு தாக்கல்

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வெற்றி
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



