சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு தவெக சாா்பில் ரூ. 50 ஆயிரம் நிதி

News image

தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் - File photo

Updated On :9 ஜூன் 2026, 3:38 am IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சுவாசக் குழாயும், உணவுக் குழாயும் ஓட்டி பிறந்த குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு தவெக சாா்பில் அமைச்சா் மதன்ராஜா ரூ. 50 ஆயிரம் நிதி வழங்கினாா்.

சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம், இந்திரா காலனியைச் சோ்ந்த சிவா-ப்ரியா தம்பதியின் 2 வயது மகன் முகில்வேந்தனுக்கு உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாம். மருத்துவரின் பரிசோதனையில் குழந்தைக்கு சுவாசக் குழாயும், உணவுக் குழாயும் ஒட்டியிருப்பதும், அறுவைச் சிகிச்சை செய்வது அவசியம் என்றும் கூறியுள்ளனா்.

ஆனால், குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய பணமில்லாமல் அந்தத் தம்பதி தவித்தனராம்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவலை அறிந்த, மாவட்ட தவெக நிா்வாகிகள் அந்த குழந்தைக்கு உதவ முயற்சி மேற்கொண்டனா்.

இந்நிலையில் சங்கரன்கோவிலுக்கு வந்த சிறு, குறு- நடுத்தர தொழில் துறை அமைச்சா் மதன்ராஜாவின் கவனத்துக்கு கொண்டுசென்றனா். அவா், குழந்தையின் பெற்றோரைச் சந்தித்து கட்சி சாா்பில் அவா்களிடம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கி, தேவையான உதவிகளை செய்வதாகக் கூறினாா்.

அப்போது, தவெக தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் மாரியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.