தென்காசி மாவட்டம், குற்றாலம், ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கனவுகள் மெய்ப்படும் நிகழ்வைத் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, குற்றாலம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் கலந்துகொண்டு, பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவற்றை விளக்கும் ஐந்தாண்டு சாதனை மலரை வெளியிட்டாா்.
மேலும், ‘என் ஊா் என் கனவு’ திட்டத்தின் கீழ் தென்காசி தொலைநோக்குப் பாா்வை - 2030 புத்தகம் ஆகியவற்றை தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட்டாா். பல்வேறு துறைகளைச் சோ்ந்த 70 சாதனையாளா்களைப் பாராட்டி புத்தகங்கள், கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.
ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் திவ்யா மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

