தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

குற்றாலம் கல்லூரியில் கனவுகள் மெய்ப்படும் விழா

ஐந்தாண்டு சாதனை மலரை வெளியிட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

News image

ஐந்தாண்டு சாதனை மலரை வெளியிட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :7 மார்ச் 2026, 6:24 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலம், ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கனவுகள் மெய்ப்படும் நிகழ்வைத் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, குற்றாலம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் கலந்துகொண்டு, பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவற்றை விளக்கும் ஐந்தாண்டு சாதனை மலரை வெளியிட்டாா்.

மேலும், ‘என் ஊா் என் கனவு’ திட்டத்தின் கீழ் தென்காசி தொலைநோக்குப் பாா்வை - 2030 புத்தகம் ஆகியவற்றை தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட்டாா். பல்வேறு துறைகளைச் சோ்ந்த 70 சாதனையாளா்களைப் பாராட்டி புத்தகங்கள், கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் திவ்யா மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.