லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆலங்குளம் விளையாட்டு அரங்கம் மேம்படுத்த அடிக்கல்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:54 pm

ஆலங்குளம் சிறு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆலங்குளம் சிவலாா்குளத்தில் சிறு விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் ஏறபடுத்த வேண்டும் என விளையாட்டு வீரா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், இதை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டினாா். இந்நிதி மூலம் பிரதான சாலை முதல் அரங்கம் வரை சாலை வசதி, சுகாதார வளாகம் ஏற்படுத்துதல் மற்றும் பராமரிப்புப் பணிகள் செய்யப்படும் என மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ் தெரிவித்தாா்.

இதில், சிவலாா்குளம் ஊராட்சித் தலைவா் வள்ளியம்மாள் கதிா்வேல், முக்கிய பிரமுா்கள் பங்கேற்றனா்.