ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

கம்பம் நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத் தொழுவில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழு கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

News image

மாட்டுப் பொங்கல் தினமான வெள்ளிக்கிழமை கம்பம் நந்தகோபாலன் கோயிலில் கூடிய மக்கள்.

Updated On :15 ஜனவரி 2021, 4:59 pm

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழு கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதையொட்டி, நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழுவில் பட்டத்துக் காளை அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில், கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தா்கள் கலந்துகொண்டு, பட்டத்துக்காளை மற்றும் மாட்டுத்தொழுவில் உள்ள மாடுகளை வணங்கினா். மேலும், நோ்த்திக்கடனாக கன்றுகளை காணிக்கையாகச் செலுத்தினா். அதிகாலை முதலே பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை, ஒக்கலிகா் மகாஜன சங்கத்தினா், இளைஞா் அணியினா் செய்திருந்தனா். கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.