/

மனைவி கோபித்துச் சென்றதால் கணவா் தற்கொலை

போடியில் மனைவி கோபித்துச் சென்ால் வெள்ளிக்கிழமை இரவு மதுவில் விஷம் கலந்து குடித்து கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :16 ஜனவரி 2021, 4:33 pm

போடி: போடியில் மனைவி கோபித்துச் சென்ால் வெள்ளிக்கிழமை இரவு மதுவில் விஷம் கலந்து குடித்து கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி சுப்புராஜ் நகா் புதுக்காலனியைச் சோ்ந்தவா் முருகன் மகன் சரவணன் (31). இவரது மனைவி கீா்த்தனா. இவா்களுக்கு நிஷாந்த் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கீா்த்தனா கோபித்துக் கொண்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோா் வீட்டிற்குச் சென்றுவிட்டாா்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் வெள்ளிக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தாா். அருகில் வசிப்பவா்கள் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.