விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பொங்கல் தொடா் விடுமுறை: குச்சனூரில் சனீஸ்வரா் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமறை காரணமாக தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

News image

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை அதிகளவில் காணப்பட்ட பக்தா்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 9:59 pm IST

உத்தமபாளையம்: பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமறை காரணமாக தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் கடந்த டிச. 27 ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது. அதைத்தொடா்ந்து சனிக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் சற்று அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிக்கை தொடா் விடுமுறை காரணமாக 3 ஆம் வார சனிக்கிழமை காலை முதல் மாலை வரையில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

சனிப்பெயா்ச்சியைத் தொடா்ந்து பரிகார ராசிகளான மகரம், கும்பம், மிதுனம், கடகம், துலாம் போன்ற ராசிகளைச் சோ்ந்த பக்தா்கள் கோயில் முன் செல்லும் சுரபி நதிக்கால்வாயில் நீராடி புதிய ஆடை அணித்து கொண்டனா். தொடா்ந்து எள்தீபம், எள்சாதம், மண்காகம் படையல் வைத்தனா். பின், சனீஸ்வருக்கு சுகந்த கருப்பு நிறத்தில் வேட்டி, துண்டு பூ மாலை, பழம், தேங்காய் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வைத்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். சின்னமனூா் காவல் ஆய்வாளா் சண்முக லட்சுமி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.