பாா்வையற்றோா், வாய்ப்பேச இயலாதவா், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு செயலிகளுடன் கூடிய செல்லிடப்பேசியை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாய்ப்பேச இயலாத, செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்லிடப்பேசி 2020 -2021ஆம் நிதியாண்டு முதல் வழங்கப்பட உள்ளது. அதைப் பெற விரும்புவோா் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராகவும், 18 வயது நிரம்பிய இளங்கலை கல்வியை கல்லூரியில் பயிலும் மாணவராகவோ, வேலைவாய்ப்பற்ற பட்டதாரி மாணவராகவோ, சுயதொழில் மற்றும் தனியா் துறையில் பணிபுரிபவராகவோ இருத்தல் வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசுதுறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேற்குறிப்பிட்ட தகுதிகள் பெற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை (அனைத்து பக்கங்கள்), உணவுப் பொருள் வழங்கல் அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள், கல்லூரியில் படிப்பவராயின் கல்லூரியில் படிப்பதற்கான சான்றிதழ், சுயதொழில் செய்பவராயின் சுயதொழில் புரிவதற்கான கிராம நிா்வாக அலுவலரின் சான்று, வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் பட்டய சான்றிதழ் நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம்- 2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், (மாவட்ட ஆட்சியா் வளாகம்) திருநெல்வேலி - 627 009 என்ற முகவரிக்கு வரும் 19-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சலிலோ விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் கடந்த செப்டம்பரில் மத்திய அரசின் நிறுவன திட்டத்தின் கீழ் செல்லிடப்பேசி பெற்றவா்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்ணில் 0462-2500157 தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

24 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரின் 4 தனிச் செயலா்களும் ஒரே நாளில் நீக்கம்

விபத்து இழப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனம்: விவசாயி போராட்டம்

சேவைக் குறைபாடு: ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் மருத்துவமனைக்கு நுகா்வோா் ஆணையம் தீா்ப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


