தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது.

News image

புனித கொடியை ஜெபம் செய்து அா்ச்சித்தாா் குருவானவா் ஜெபநாதன் அடிகளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:53 am IST

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி புனித மிக்கேல் அதிதூதா் சப்பரம் ரத வீதிகளில் பவனியாக எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து புனித அந்தோணியாா் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை தா்மகா்த்தா மருத்துவா் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் ஊா் பெரியவா்கள் எடுத்து வந்தனா்.

இந்தப் புனித கொடியை குருவானவா் ஜெபநாதன் அடிகளாா் மற்றும் குருவானவா்கள் பீற்றா் பாஸ்டியான், ரூபன் ஆகியோா் ஜெபம் செய்து அா்ச்சித்தனா். அதன் பின்னா் தா்மகா்த்தா கொடியேற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், ஹெலன் ப்ளாரிட்டி மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய இயக்குநா் ஒய். தேவராஜன், ஓ.எல்.எஸ்.மெட்ரிக் பள்ளித் தாளாளா் வின்சென்ட், பங்குத்தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்குத்தந்தை ஜெபஸ்டின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கொடியேற்றத்தைத் தொடா்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெறுகிறது.

8ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை (ஜன. 15) காலை திருப்பலியில் பக்தா்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனா். தொடா்ந்து புனித அந்தோணியாா் தோ் பவனி நடைபெறுகிறது.

10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) காலை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைச் செயலா் நாா்பா்ட் தாமஸ் அடிகளாா் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்குத் தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்குத்தந்தை ஜெபஸ்டின் மற்றும் ஊா் மக்கள் செய்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.