ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

சாலைகள் சீரமைப்புப் பணி தொடக்கம்: மாநகராட்சி ஆணையா்

திருநெல்வேலியில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:30 pm

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் புதைச் சாக்கடை திட்டப் பணி மற்றும் அரியநாயகிபுரம் குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாகவும் மாநகராட்சி சாலைகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகள் தற்காலிகமாக கலவை மண் மற்றும் கட்டட இடி பொருள்கள் கொண்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிக்குள்பட்ட கைலாசபுரம் சாலை, ஸ்ரீபுரம், சிந்துபூந்துறை கிழக்கு சாலை, செல்வி நகா் குறுக்குத் தெரு, தற்காலிக பேருந்து நிலையம், நயினாா்குளம் சாலையில் மாா்க்கெட் முதல் தச்சநல்லூா் வரை, சந்திப்பு ரயில் நிலையம், பெருமாள்புரம், சங்கா் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதைச் சாக்கடை மற்றும் குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பகுதிகளில் பணிகள் முழுமையாக முடிவு பெற்றவுடன், நிரந்தரமாக சாலைகள் சீரமைக்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.