ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காவல்துறையைக் கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரை அடுத்த வெங்கலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை

Updated On :2 மே 2013, 6:57 am

திருவள்ளூரை அடுத்த வெங்கலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து அக்கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்டனர்.

 திருவள்ளூரை அடுத்த வெங்கல் பகுதியில் கடந்த மாதம் 24-ம் தேதி பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர், கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து, பா.ஜ.க.வினர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜே.லோகநாதன் தலைமை வகித்தார்.எல்லாபுரம் ஒன்றியத் தலைவர் ஏ.கே.மூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, அக்கட்சியின் மாநில அரசு தொடர்புச் செயலாளர் பாஸ்கர், மாநில விவசாய அணித் தலைவர் மலையன் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.

எல்லாபுரம் ஒன்றியச் செயலாளர் பாபு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.