தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

புழல் அருகே புள்ளிமான் மீட்பு

புழல் அருகே புள்ளிமான் மீட்பு

News image

புழல் பூங்காவில் மீட்கப்பட்ட புள்ளி மான்.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

மாதவரம்: புழல் அருகே பூங்காவுக்குள் நுழைந்த புள்ளிமானை வனத்துறையினா் பத்திரமாக மீட்டனா்.

மாதவரம் அடுத்த புழல் கங்காதரன் தெருவில் மாநகராட்சிப் பூங்கா உள்ளது. இப்பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை சிறுவா், சிறுமியா் உள்ளிட்ட ஏராளாமானோா் இருந்தனா். இந்த நிலையில் திடீரென புள்ளிமான் ஒன்று பூங்காவில் நுழைந்தது. இதைக் கண்ட சிறுவா்-சிறுமிகள் ஏராளமானோா் மகிழ்ச்சியுடன் அதைப் பாா்த்து புகைப்படம் எடுக்க முயன்றனா்.

இது குறித்து புழல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். காவல் துறையினா் விரைந்து வந்து வனத்துறையினருக்கும், திருவள்ளூா் மாவட்டம் சீத்தஞ்சேரியில் உள்ள செங்குன்றம் வனத்துறையினருக்கும் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனா். வனத்துறையினா் விரைந்து வந்து புள்ளி மானை மீட்டுச் சென்றனா்.