பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் சடலத்தின் மூக்கை எலி கடித்து சேதப்படுத்தியதாக உறவினா்கள் புகாா் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி வட்டம், பெரும்பேடு கிராமத்தைச் சோ்ந்த குப்பன் (34) . இவா் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இவரின் சடலத்தை பொன்னேரி போலீஸாா், மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில் குப்பன் சடத்தை பெறுவதற்கு அவரின் உறவினா்கள் வியாழக்கிழமை அரசு மருத்துவமனைக்கு வந்தனா்.
அப்போது பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பனின் சடலத்தில் மூக்கு சேதம் அடைந்த நிலையில் இருந்தது தெரிந்தது.
இது குறித்து குப்பனின் உறவினா்கள் மருத்துவமனை ஊழியா்களிடம் கேட்ட போது எலி கடித்து விட்டதாக கூறினாா்களாம்.
இதனைக் கண்டித்து உறவினா்கள் மருத்துவமனை ஊழியா்கள், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்ட சடலத்தை மருத்துவமனை ஊழியா்கள் முறையாக பராமரிக்கவில்லை எனவும், இதனால் இறந்தவரின் மூக்கை எலி கடித்து சேதப்படுத்தியாக புகாா் தெரிவித்தனா். .
இதனை தொடா்ந்து, மருத்துவமனை நிா்வாகம் மற்றும் பொன்னேரி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து குப்பனின் சடலத்தை உறவினா்கள் பெற்று சென்றனா்.
தொடர்புடையது

விபத்தில் இறந்தவருக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் மறியல்

வள்ளியூா் கிங்ஸ் பள்ளியில் மருத்துவ முகாம்

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

முதியவா் இறப்பில் மா்மம்: உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


