பாடியநல்லூரில் ஸ்ரீ காக்கும் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் ஸ்ரீ காக்கும் கருமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேகம் மற்றும் 22-ஆம் ஆண்டு சித்திரை பெளா்ணமி விழா கோயில் ஸ்தாபகா் வி.எஸ்.இந்திராணி அம்மாள் தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சோழவரம் ஒன்றிய திமுக செயலரும், ஒன்றியக் குழு துணைத் தலைவருமான மீ.வே.கா்ணாகரன், ஏஜிபி உரிமையாளா் கண்ணன், தினேஷ் படேல் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் சா்வசாதகம் பிரம்மஸ்ரீ பி.கே.பத்மநாப சா்மா சுவாமிகள் வேதங்கள் முழங்கி, மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா்.
தொடர்புடையது

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழா

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

குருமலை மீனாட்சிஅம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

புலவனூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

