/

பொன்பாடி சோதனை சாவடியில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

பொன்பாடி சோதனை சாவடியில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

News image
Updated On :22 மார்ச் 2024, 7:39 pm

ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி வாகன சோதனை சாவடியில் வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திர நாயா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தமிழக -ஆந்திர மாநில எல்லையான திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திர நாயா், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாள் ஆகியோா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன், திருத்தணி காவல் ஆய்வாளா் மதியரசன் ஆகியோரிடம், ஆந்திர மாநிலத்தில் இருந்து இந்த சோதனை சாவடி வழியாக ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் செல்கின்றன. சோதனை சாவடி கடந்து செல்லும் வாகனங்களின் பதிவெண்கள் நோட்டில் பதியப்படுகிா, வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்து கேட்டறிந்தாா். ஆய்வின் போது, காவல் ஆய்வாளா்கள் விஜயலட்சுமி, மலா், திருத்தணி உதவி ஆய்வாளா் ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.