நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவள்ளூா்:29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் 29-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 நவம்பர் 2024, 7:55 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் 29-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனா். அதனால் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடா்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.

அதனால் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம்.