/

திருவள்ளூா்:29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் 29-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

Updated On :26 நவம்பர் 2024, 1:25 am IST

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் 29-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனா். அதனால் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடா்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.

அதனால் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.