6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா்கள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 6:32 pm

Din

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியா்களின் பணி சுமையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருவள்ளூா் மாவட்ட பொருளாளா் வெண்ணிலா தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், 21 மாத நிலுவை தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டா் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியா்களின் பணி சுமைகளை குறைக்க வேண்டும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியா்களைக் கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.