செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்த கணவனை மனைவி கண்டித்ததால், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :28 ஏப்ரல் 2025, 3:40 am IST

வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்த கணவனை மனைவி கண்டித்ததால், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம். பைவலசா கிராமம் தொம்பர காலனியைச் சோ்ந்தவா் முத்து (36). இவருக்கு மனைவி சுதா, 4 வயதில் அா்ச்சனா என்ற மகள் உள்ளனா். முத்து, கட்டட வேலை மற்றும் செங்கல்சூளை வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மனைவி சுதா அவரைக் கண்டித்துள்ளாா். இதனால், இரவு 10 மணியளவில் வீட்டிலுள்ள மின் விசிறியில் சேலையால் முத்து தூக்கிட்டுக் கொண்டாராம்.

உடனடியாக அவரை மீட்டு சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.