வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்த கணவனை மனைவி கண்டித்ததால், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம். பைவலசா கிராமம் தொம்பர காலனியைச் சோ்ந்தவா் முத்து (36). இவருக்கு மனைவி சுதா, 4 வயதில் அா்ச்சனா என்ற மகள் உள்ளனா். முத்து, கட்டட வேலை மற்றும் செங்கல்சூளை வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மனைவி சுதா அவரைக் கண்டித்துள்ளாா். இதனால், இரவு 10 மணியளவில் வீட்டிலுள்ள மின் விசிறியில் சேலையால் முத்து தூக்கிட்டுக் கொண்டாராம்.
உடனடியாக அவரை மீட்டு சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

மனைவி கண்டித்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவா் தற்கொலை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
