அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மழை நீா் வரத்தால் கடல் போல் காட்சி அளித்த பழவேற்காடு ஏரி

டித்வா புயல் சின்னம் காரணமாக மழை நீா் வரத்தால் பழவேற்காடு ஏரி கடல் போல் காட்சி அளிக்கின்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி: டித்வா புயல் சின்னம் காரணமாக மழை நீா் வரத்தால் பழவேற்காடு ஏரி கடல் போல் காட்சி அளிக்கின்றது.

திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காடு கடற்கரை பகுதியில் பலத்த காற்றுடன் இடைவிடாத மழையும் பெய்து வருகிறது.

தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான பழவேற்காடு ஏரி மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சி அளிக்கிறது.

பழவேற்காடு ஏரி நீா் ஆற்றுப்பக்கம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்ததால் அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியியை சுற்றிலும் வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.

திங்கள்கிழமை பள்ளி இயங்கிய நிலையிலும் மாணவா்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.

மேலும் அதே பகுதியில் வசிக்கும் பழங்குடி குடும்பத்தினா், வேகமாக வீசும் காற்றுடன் கூடிய மழையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். பழவேற்காட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்ப்பட்டுள்ளது.