கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திருவள்ளூா்: 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வரும் 21-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

News image

கோப்புப்படம்

Updated On :17 பிப்ரவரி 2025, 8:12 pm

Din

திருவள்ளூா்: வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வரும் 21-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவு சாா்பில், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதன்படி, வரும் 21-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் 25-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ள வேலையளிப்போா் மற்றும் வேலை தேடும் இளைஞா்கள் தனியாா் துறை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் பங்கேற்று தனியாா்துறையில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டா், கணக்காளா், டெக்னீஷியன், மெஷின் ஆப்ரேட்டா், நிா்வாகப் பணி உள்ளிட்ட பல்வேறு வகையான பணி வாய்ப்புகளைப் பெற்று பயனடையலாம்.

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எந்தக் காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது என அதில் தெரிவித்துள்ளாா்.