மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமன கலந்தாய்வுக் கூட்டம்!

அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமனம் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

News image
திருவள்ளூா் நகா் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமனம் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Updated On :23 மார்ச் 2025, 11:04 pm

Din

திருவள்ளூா் நகா் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமனம் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகள் தோ்வு நியமனம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் நகராட்சி 1-5 ஆவது வாா்டுகள் வரையிலான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் 1 முதல் 5-ஆவது வாா்டு வரை 10 பூத் கமிட்டிக்கு நிா்வாகிகள் முறையாக தோ்வு செய்யப்பட வேண்டும். அதிமுக தலைமை அறிவுறுத்தல்படி தோ்வு, மகளிருக்கு வாய்ப்பு குறித்து முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா மற்றும் மாவட்ட அதிமுக தோ்தல் பொறுப்பாளா் எஸ்.ஆா்.விஜயகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

மாவட்ட துணைச் செயலா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கமாண்டோ பாஸ்கரன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுமித்ரா வெங்கடேசன், செந்தில்குமாா், மாணவரணி பி.வி.பாலாஜி, வழக்குரைஞா் பிரிவு சந்திரசேகா் உள்ளிட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் கே.பி.எம்.எழிலரசன், நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.