விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

செயற்கைகோள் ஏவும் நாள்களில் நிவாரணம்: மீனவா்கள் கோரிக்கை

பழவேற்காடு பகுதியில் மீன் பிடித்து தொழில் செய்து வரும் நிலையில் செயற்கைகோள் ஏவும் நாள்களில் தடை விதித்து வருவதால், நிவாரணம் வழங்க நடவடிக்கை

News image
Updated On :17 நவம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: பழவேற்காடு பகுதியில் மீன் பிடித்து தொழில் செய்து வரும் நிலையில் செயற்கைகோள் ஏவும் நாள்களில் தடை விதித்து வருவதால், நிவாரணம் வழங்க நடவடிக்கை வேண்டும் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் மீனவா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

பொன்னேரி அருகே பழவேற்காடு 8 ஊராட்சிகள் மற்றும் 50 கிராமங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை அளித்த மனு: பழவேற்காடு பகுதியில் லைட்ஹவுஸ் குப்பம், கோட்டைக்குப்பம், தாங்கல், பெரும்புலம், அவுரிவாக்கம், சிறுளப்பாக்கம், கள்ளூா், பூங்குளம் ஆகிய ஊராட்சிகள் உள்பட 50 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித் தொழில் செய்து வருகிறோம். இப்பகுதிக்கு மிக அருகில் ஸ்ரீஹரிகோட்டா வின்வெளி ஏவுதளம் அமைந்த பிறகு செயற்கைகோள் செலுத்தும் போதெல்லாம், மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

பொதுவாகவே இயற்கை சூழ்நிலைகளால் ஆண்டுக்கு குறைந்தது 6 மாதம் மீன்பிடிக்க செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். அப்போது, தமிழக அரசு மீன்பிடி தடைக்கால நிவாரணம், மீன்பிடி குறைந்தகால நிவாரணம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போதுள்ள விலைவாசியில் அரசு வழங்கும் நிவாரணத் தொகை எங்களுக்கு போதுமானதாக இல்லை.

ராக்கெட் மூலம் செயற்கைகோள் செலுத்தும் போதெல்லாம், மீன்பிடிக்க தடை விதிப்பது என்பது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், மீன் பிடி தொழில் வருமானம் சில மாதங்கள் மிகவும் குறைந்து டீசல் நஷ்டமும் ஏற்படுகிறது. இதனால் எங்கள் வாழ்க்கை மிகவும் வறுமையில் கூடியதாகவே உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைதான் நீடித்து வருகிறது.

செயற்கைகோள் ஏவும் நாள்களில் மீன் பிடிக்கத் தடைவிதிப்பதால், நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.