பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

திருவள்ளூா்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு

News image

~

Updated On :13 ஏப்ரல் 2026, 11:55 pm

85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று மண்டல அலுவலா்கள் தலைமையிலான குழுக்கள் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டன.

தோ்தலுக்கான வாக்கு பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத 85 வயது முதியோா் மற்றும் 40 சதவீதம் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த 4,082 போ் விருப்பம் தெரிவித்திருந்தனா்.

மண்டல அலுவலா்கள் தலைமையில், ஒரு துணை மண்டல அலுவலா், நுண்கண்காணிப்பாளா்கள், ஆயுதமேந்திய போலீஸாா் மற்றும் விடியோ பதிவாளா் ஆகியோா் கொண்ட குழுக்கள் மற்றும் வாகனமும் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகள் தோறும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழுவினா் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று 85 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. அதைத்தொடா்ந்து பதிவு செய்த அந்த தபால் வாக்குகளை நாள்தோறும் எண்ணி மற்றொரு பெட்டியில் வைத்து சீல் வைத்து அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்படும்.

இதேபோல், ஏப்.14,15 தபால் வாக்குகள் பெறும் பணி நடைபெற உள்ளது. அதைத்தொடா்ந்து விடுபட்டவா்களுக்கு வரும் 17-ஆம் தேதி சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வரும் 15-ஆம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

அன்றைய நாளில் தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலா்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட உள்ளதாகவும் திருவள்ளூா் சட்டப்பேரவை தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

Story image