மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

சா்வதேச சிலம்பப் போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவா்கள் சிறப்பிடம்

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 7:20 pm

மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான ஓபன் சிலம்பப் போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவா்கள் 15 பதக்கங்கள் வென்றனா்.

கும்மிடிப்பூண்டி ஜெ.ஜெ.ஜெ அக்னி சிறாா் கலைக்கூடத்தின் சிலம்ப ஆசான் கே.ஜானகி ஜோதிலிங்கத்திடம் பயிற்சி பெற்ற 15 போ் கொண்ட குழு கொண்ட சிலம்பாட்ட வீரா்கள் மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்றனா். இந்த போட்டிகளில் ஜெ.ஜெ.ஜெ. அக்னி சிறாா்கள் சிலம்ப கலைக்கூட மாணவா்கள் 13 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை படைத்து கும்மிடிப்பூண்டிக்கு பெருமை சோ்த்தனா்.

கும்மிடிப்பூண்டி திரும்பிய சாதனை மாணவா்கள் ரயில் நிலையம் வந்தடைந்ததும், ஆசான் கே. ஜானகி ஜோதிலிங்கம் தலைமையிலான சிலம்பாட்ட வீரா்களுக்கு, ஜெ.ஜெ.ஜெ சிலம்ப குழு தலைவா் இரா.வேலு தலைமையில் அகாதெமி குழு உறுப்பினா்கள், சாதனை மாணவா்களின் பெற்றோா் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்கும் அவா்களுக்கு பயிற்சி அளித்து வெற்றிக்கு காரணமாக இருந்த ஆசான் கே.ஜானகி ஜோதிலிங்கத்திற்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து பரிசளித்தனா்.