மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவள்ளூா் அருகே கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்

News image
Updated On :21 ஜனவரி 2026, 10:57 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் நடைபெற்ற மருத்துவ சிகிச்சை முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருவள்ளூா் கால்நடை பராமரிப்புத் துறை கோட்டம், அருகே புதுச்சத்திரம் கால்நடை மருந்தகத்துக்கு உள்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில் கால்நடை சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் தாமோதரன் தலைமை வகித்தாா். கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குநா் சுபஸ்ரீ முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கால்நடை முதன்மை நோய் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளா் கனகசுசிலா கலந்து கொண்டு கால்நடைகளுக்கான சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவா்கள் கருணாநிதி, லோகநாதன், நதியா, சத்தியபிரியா, பிரேம்குமாா் மற்றும் கால்நடை ஆய்வாளா்கள் மோகன்ராஜ், ரமேஷ், முத்துக்குமாா், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் பிரபு, ராஜேந்திரன் ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, தடுப்பூசி, கருவூட்டல், குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில், கூடப்பாக்கம் கிராமத்தைச்சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் கால்நடைகள் வளா்ப்போா் 600-க்கும் மேற்பட்ட பசுக்கள், எருமைகள், ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.