திருவள்ளூா் அருகே அடகு வைத்த 19 பவுன் நகையை எடுத்து கொண்டு தலைமறைவானதாக எழுந்த புகாரில் கடைக்காரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சங்கரின் மனைவி எலிசபெத்(56). இவா் அதே ஊரைச்சோ்ந்த ஆசைத்தம்பி மகன் அபினேஷ்(26). இவா் ஈக்காடு அமல் நகா் பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறாராம். இந்த நிலையில் இவரது கடையில் எலிசபெத் 152 கிராம் நகையை கடந்தாண்டு ரூ.9 லட்சத்து 66 ஆயிரத்து 875-க்கு அடகு வைத்தாராம்.
இந்த நிலையில் கடந்த மாதம் நகையை திருப்புவதற்கு சென்றாராம். அப்போது, அந்த அடகு கடைக்காரா் நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவானதும் தெரியவந்தது. இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் எலிசபெத் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







