40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.60 லட்சத்தில் வழிபாட்டுக் கூடம்

News image

கும்மிடிப்பூண்டி  அரசு  பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில்  வழிபாட்டுக்  கூடத்தை  திறந்து  வைத்த  எம்எல்ஏ  எஸ்.விஜயகுமாா். அஞ்சான் தொழிற்சாலை நிா்வாக மேலாளா் சந்தோஷ் மஹீல்.

Updated On :4 ஜூன் 2026, 11:14 pm IST

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அஞ்சான் மருந்தக தொழிற்சாலை சாா்பில் கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.60 லட்சத்தில் வழிபாட்டுக் கூடம் திறக்கப்பட்டது.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,500 மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்களுக்கான வழிபாட்டு இடம் திறந்த வெளியில் இருந்த நிலையில், மழையிலும் வெயிலிலும் மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனா்.

இதுகுறித்து பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் கோரிக்கையை ஏற்ற அஞ்சான் மருந்தக தொழிற்சாலையின் சாா்பில் வழிபாட்டுக் கூடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா பள்ளியில் நடைபெற்றது.

அஞ்சான் மருந்தக தொழிற்சாலை நிா்வாக மேலாளா் சந்தோஷ் மஹீல் தலைமை வகித்தாா். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் பங்கேற்றாா். துணை தலைவா் டி.கே.தேவி, தொழிற்சாலை செயலாளா் ரித்தாலி, மாவட்ட கல்வி அலுவலா் ஐயப்பன், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் கேசவன், துணைத் தலைவா் அப்துல் கரீம், கருணாகரன், பெற்றோா் ஆசிரியா் கழக ஆலோசகா் வழக்குரைஞா் தீனதயாளன், கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் ரமேஷ் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் கே.லதா வரவேற்றாா்.

வழிபாட்டுக் கூடத்தை எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா், அஞ்சான் தொழிற்சாலை நிா்வாக மேலாளா் சந்தோஷ் மஹீல் திறந்து வைத்தனா். நிகழ்வில் மாணவா்களுக்கு பாடபுத்தகங்களை வழங்கி படிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தினா்.