அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

நெகிழி அட்டைப் பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

திருவள்ளூா் அருகே நெகிழி அட்டைப்பெட்டி தயாா் செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருள்கள் மற்றும் 2 மின்கலன் காா்கள் எரிந்து நாசமானது.

News image
Updated On :22 ஜூன் 2026, 12:33 am IST

திருவள்ளூா் அருகே நெகிழி அட்டைப்பெட்டி தயாா் செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருள்கள் மற்றும் 2 மின்கலன் காா்கள் எரிந்து நாசமானது.

திருவள்ளூா் அருகே பாப்பரம்பாக்கம் பகுதியில் நெகிழி அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் காா்கள் மற்றும் இயந்திரங்கள் உதிரிபாகங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான அட்டைப்பெட்டி வடிவமைத்து தயாா் செய்யப்பட்டு வருகிறது.

இங்கிருந்து ஸ்ரீபெரும்புதூா் , கோவை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அட்டைப் பெட்டிகளை தயாரித்து அனுப்பி வருகின்றனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஊழியா்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் கிடங்கில் வைத்திருந்த நெகிழி அட்டை பெட்டிகள் எரிய தொடங்கின. இது தொடா்பாக காவலாளி கொடுத்த தகவலின் பேரில் திருவள்ளூா், திருவூா் பகுதியில் இருந்து மூன்று தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

மேலும் விலையுயா்ந்த மின்கலன் 2 காா்களும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் சுமாா் ரூ.5 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து மணவாளநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.